இந்தியா

பாகிஸ்தானில் இருந்து செய்தியோடு வந்த பலூன்

webteam

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் நாணயம் மற்றும் வரைபடங்கள் அடங்கிய பலூன்கள் கண்டெடுக்கப்பட்டன.

கபுர்தலா கிராமத்தில் விளைநிலத்தில் 4 பலூன்களும் உருது மொழியில் வாசகங்கள் எழுதப்பட்ட தாள்களும், நாணயங்களும் கிடைத்துள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெடுக்கபப்ட்ட தாள்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் முயற்சியிலும் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பறவை மூலமாக இந்த பலூன்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.