இந்தியா

வரிந்துகட்டி மாட்டில் பால் கறந்த பாபா ராம்தேவ்

வரிந்துகட்டி மாட்டில் பால் கறந்த பாபா ராம்தேவ்

webteam

பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் அறிமுக நிகழ்வில் பங்கேற்ற பாபா ராம்தேவ் பால் கறந்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நிறுவனம் பல பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்துவருகிறது. உணவு, அழகு சாதனப்பொருட்கள் என ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான பொருட்களை பதஞ்சலி விற்பனை செய்கிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று பதஞ்சலி நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுக நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பதஞ்சலி யோகா மைய நிறுவனர் பாபா ராம் தேவ் கலந்து கொண்டார். அப்போது ராம்தேவ் பிற தொழிலாளர்களுடன் இணைந்து மாட்டின் மடியில் பால் கறந்தார். அவரே வரிந்துகட்டிக்கொண்டு பால் கறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கவனிக்க வைத்தது.