இந்தியா

அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள்: இன்று விசாரணை !

jagadeesh

அயோத்தி வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இம்மனுக்களை விசாரிக்கின்றது.

தலைமை நீதிபதியின் அலுவலக அறையில் இவ்விசாரணை நடைபெறும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இஸ்லாமிய தரப்புக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் கடந்த மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய தரப்பினர் சிலர் மனு செய்திருந்தனர்.