இந்தியா

தலைக்கேறிய போதை.. தெளிவாக இருப்பதாக நடித்த மணமகன்.. தடலாடி முடிவெடுத்த மணப்பெண்!

JananiGovindhan

மணமேடை வரை சென்ற பிறகு தடலாடியாக நிறுத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், மணமேடைக்கு மணமகனே போதையில் வந்ததால் கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான மணப்பெண் அதிரடியாக திருமணத்தை நிறுத்திருக்கிறார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பர்கஞ்சன் பகுதியில் பிரசென்ஜித் ஹலோய் என்பவருக்குதான் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் ஜகஜோதியாக நடந்திருக்கிறது. பொதுவாக திருமண நிகழ்வின் போது உறவினர்கள், நண்பர்கள் மது குடித்துவிட்டு அட்டூழியம் செய்வது வாடிக்கையாக இருந்தாலும், இங்கு மணமகனான பிரசென்ஜித்தே போதையில் மணமேடைக்கு வந்திருக்கிறார்.

இது எவருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக அவ்வப்போது தெளிவாக இருப்பது போல மணமகன் பாசாங்கு காட்டியிருக்கிறார். இதுபோக கீழே விழுந்து விடாமல் இருக்க மணமகனுக்கு பின்னால் அவரது உறவினர் ஒருவரும் அமர்ந்தும் இருந்திருக்கிறார்.

இதையெல்லாம் கவனித்த மணமகள், பிரசென்ஜித் குடித்துவிட்டுதான் வந்திருக்கிறார் என்பதை ஒருவழியாக உறுதிப்படுத்திக் கொண்டதால் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். இதில் மணமகனும், அவரது உறவினர் அல்லது நண்பர் மட்டுமல்லாமல், பிரசென்ஜித்தின் தந்தையும் முழு போதையில் திருமணத்தில் உலவியிருக்கிறார்.

இவையெல்லாம் கருத்தில் கொண்ட மணமகள் நிச்சயமாக பிரசென்ஜித்தை திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என முடிவெடுத்து பஞ்சாயத்துதாரர்களிடம் தெரிவிக்க, இது சலசலப்பை ஏற்படுத்தியதால் போலீசாரை வரவழைத்து அவர்கள் முன்னிலையிலேயே அதிரடியாக மணமகள் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.

இந்த நிகழ்வுகளால் மணமகளின் தந்தை உடல்நலிவுற்று போனதால், மணமகனான பிரசென்ஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் தெரித்ததால் அதன் மீது நல்பாரி சதார் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.