இந்தியா

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றுப்பாலம்

webteam

அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்ட காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நகான் என்ற பகுதியில் ஏற்பட்ட
வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த குறுகிய பாலம் அடித்துச் செல்லப்பட்டது.