இந்தியா

ஆர்யன் கானின் கைது போலியானது; அடுத்த இலக்கு ஷாருக்கான்: மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்

Veeramani

ஆர்யன் கானின் கைது போலியானது, அடுத்த இலக்கு ஷாருக் கான் என்று  மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் நவாப் மாலிக், “ஆர்யன் கானின் கைது போலியானது. கடந்த ஒரு மாதமாக இந்த தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது. அவர்களின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான்” என தெரிவித்தார்.

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் அக்டோபர் 3ஆம் தேதி, தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார்.