Arvind Kejriwal
Arvind Kejriwal pt desk
இந்தியா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8 வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

webteam

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி. உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.

ed

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த இதுவரை 7 முறை சம்மன் அனுப்பட்டுள்ளது. ஆனால், ஒருமுறை கூட அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறையின் சம்மனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 8 ஆவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 4ஆம் தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.