இந்தியா

சியாச்சினில் திடீர் பனிச்சரிவு - ராணுவ வீரர்கள் சிக்கியிருக்க வாய்ப்பு

rajakannan

சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தரையில் இருந்து 18,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சினின் வடக்கு கிளாசியர் பகுதியில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பலர் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.