இந்தியா

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி 154 தடுப்பு மருந்து சோதனை நிறைவு - பாரத் பயோடெக்

webteam

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி154 தடுப்பு மருந்து சோதனை மற்றும் பூஸ்ட்ர் சோதனை நிறைவடைந்துள்ளாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட மற்றும் பூஸ்டர் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

பிபிவி154 (BBV154) என்ற கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோ டெக் நிறுவனம் பரிசோதித்து வந்தது. அந்த சோதனையின் முடிவில் கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் பிபிவி 154 செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மூக்குவழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.