இந்தியா

ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

webteam

சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து  ஆளும் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து கக்கோரி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது

முழு அடைப்பு காரணமாக ஆந்திராவில் சாலைகள் வெறிச்சோடின. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.