அந்தமானில் உள்ள நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.
இன்று காலை 8.21 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இதே போல ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இது காலை 5.48 மணிக்கு உணரப்பட்டது. லேசான நிலநடுக்கம் என்பதால் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.