இந்தியா

"புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி" - தமிழில் வாழ்த்து கூறிய அமித்ஷா..!

Veeramani

தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் திருவள்ளுவர் தினத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அமித்ஷா பதிவிட்டுள்ள ட்வீட்டில் “திருவள்ளுவர் தினத்தில் புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி. சமூகம், அரசியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றில் காலந்தொட்டு பலதரப்பட்ட மக்களை அவர் கருத்தால் கவர்ந்துள்ளார். நமது தமிழ் இலக்கியத்திற்கு திருவள்ளுவர் செய்த பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்” என கூறியிருக்கிறார்