இந்தியா

மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை

webteam

பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற போதிலும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக அமர்நாத் யாத்ரீகர்கள் வழக்கம் போல் மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

அனந்தநாக் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் 7 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் அமர்நாத் குகைக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்வையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.