இந்தியா

அனைத்து காவல்நிலையங்களும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை -அமைச்சர் நமச்சிவாயம்

Sinekadhara

அனைத்து காவல் நிலையங்களும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சமூக வலை தளங்கள் மூலம் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை பெண்கள் தனியாக செல்ல உதவி கேட்டால் 112 என்ற எண்ணில் தொடர்புகொண்டால் அவரை பெண் காவலர்கள் அவர்கள் போகும் இடத்துக்கு அழைத்துச்சென்று விடுவார்கள் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார்.