இந்தியா

பஞ்சாப் : 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்

webteam

பஞ்சாப்பில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா அதிகரித்து வருவதால் 5, 8, 10 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுகிறார்கள். 12 வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட 12-ஆம் வகுப்பு தேர்வு சூழ்நிலையை பொறுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.