இந்தியா

உ.பியில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் அகிலேஷ்

webteam

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சுல்தான்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தனது நண்பரும் வழக்கறிஞருமான அருண் வர்மாவுக்கு ஆதரவாக சுல்தான்பூரில் தமது பிரசாரத்தை அகிலேஷ் யாதவ் தொடங்குகிறார். ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ப்ரியங்கா காந்தியும் இன்று பிரசாரத்தில் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்‌‌தில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பகுஜன் சமாஜ் கட்சி, தற்போதைய ஆளும்கட்சியான சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.