இந்தியா

ரம்ஜான் விழாவில் யோகி கலந்து கொள்ளாதது ஏன்? அகிலேஷ் யாதவ் கேள்வி

webteam

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

அப்போது, அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’முன்னாள் முதல்வரான நான் இந்த தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இப்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஏன் கலந்து கொள்ளவில்லை? இதற்கு அவர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். காஷ்மீரில் நடந்து வரும் கலவரங்களை மத்திய அரசு விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.