இந்தியா

இந்திய ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

webteam

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், ராணுவம், விமானப்படை, பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவ முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் பயங்கரவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் பாகிஸ்தானை ஊடுருவ முடியாத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 

இருப்பினும் எல்லையில் தொடர்ந்து அத்துமீறினால், இந்திய ராணுவம் நடத்தும் பதில் தாக்குதலை ஐநா சபையில் குறிப்பிட்டு பேசலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், ராணுவம், விமானப்படை, பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.