Bihar-Love-Powercut-Village - Marriage
Bihar-Love-Powercut-Village - Marriage Twitter
இந்தியா

பீகார்: காதலனை சந்திக்க மொத்த கிராமத்தையும் இருளில் ஆழ்த்திய இளம் பெண்! கிராம மக்கள் அதிரடி முடிவு

PT WEB

வடக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும்  ப்ரீத்தி என்ற பெண், ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். அப்பகுதியில் நீண்ட காலமாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து மின்சாரவாரியத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இரவில் தினசரி நீண்டநேரம் மின்தடை ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் கிராமத்தினர் இறங்கினர். அப்போது தனது காதலனை சந்திப்பதற்காக வந்த ப்ரீத்தி தினமும் இரவில் கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்து வந்தது அப்போது தெரியவந்தது.

Bihar-Love-Powercut-Village - Marriage

ராஜ்குமார்- ப்ரீத்தி ஜோடியை கையும் களவுமாக பிடித்து ஆத்திரமடைந்த  கிராம மக்கள், ராஜ்குமாரை தாக்கினர். அப்போது கூட தனது காதலனை காப்பாற்றுவதிலிருந்து  அப்பெண் தவறவில்லை.

தினமும் மின்தடையை சமாளிக்க முடியாது என்ற முடிவில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கிராமமக்கள் முடிவு செய்தனர். எனவே, அருகில் இருந்த கோவிலுக்கு இருவரையும் அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தனர்.

இது குறித்து கிராமவாசி கோவிந்த சவுதிரி கூறுகையில், “ப்ரீத்தி தினமும் இரவில் கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்து வந்தார். இதன் காரணமாக கிராமத்தில் பல திருட்டுகள் பதிவாகியுள்ளன. அந்தப் பெண்ணால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்” என்றார். கிராம மக்கள், ராஜ்குமாரை தாக்கிய வீடியோ சமுகவலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

தன் காதலனை சந்திப்பதற்க்காக முழு கிராமத்தையும் இருளில் ஆழ்த்திய இப்பெண்ணின் செயல் அப்பகுதி மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- ஜெனிட்டா ரோஸ்லின்