இந்தியா

கேரளா : உணவகத்தின் முன்பு Non-Halal’ குறித்த அறிவிப்பு பலகை வைத்ததால் கைகலப்பு

EllusamyKarthik

கேரள மாநிலத்தை சேர்ந்த துஷாரா அஜித் என்பவர் உணவக தொழில் செய்து வருகிறார். அவர் கொச்சியில் அமைந்துள்ள InfoPark எனும் ஐடி பூங்கா அமைந்துள்ள பகுதியில் புதிதாக தனது உணவக கிளை ஒன்றை திறந்துள்ளார். அந்த புதிய கிளையில் ‘Non-Halal’ உணவு குறித்த அறிவிப்பு உணவகத்திற்கு வெளியே காட்சிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் இரண்டு பேர் துஷாராவை தாக்கி உள்ளனர். அந்த தாக்குதலில் காயம்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவரை தாக்கிய இருவரில் ஒருவரான வினோஜ் ஜார்ஜ் என்பவரும் துஷாரா தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். அதனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் கடந்த ஞாயிறு அன்று மாலை நடைபெற்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். ‘Non-Halal’ உணவு குறித்த அறிவிப்பை கடைக்கு வெளியில் காட்சிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அருகாமையில் உள்ள கடைக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அந்த உணவகத்திற்கு அருகில் அமைந்திருந்த சேட்-ஸ்டால் ஒன்றை நகர்த்தியது தான் காரணம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 326-இன் கீழ் போலீசார் துஷாரா மற்றும் அவரது கணவர் உட்பட மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.