இந்தியா

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்: ஓடிச் சென்று காப்பாற்றிய ஆர்பிஎஃப் காவலர்

JustinDurai
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென தடுமாறி கீழே விழுந்த நிலையில், அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விரைந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றினார்.
ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்காமல் அந்த பெண்மணி நூலிழையில் உயிர் தப்பினார். மகாராஷ்டிராவின் சந்துர்ஷ்ட் சாலை ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட காவலரை, சக பயணிகளும், உயரதிகாரிகளும் பாராட்டினர்.