இந்தியா

டெல்லி சட்டப்பேரவை முதல் செங்கோட்டை வரை கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை!

JustinDurai
டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கபாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுதந்தரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்கள் அந்த சுரங்கத்தை பயன்படுத்தியிருக்கலாம் என டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். தற்போது சுரங்கப் பாதையின் முகப்பு பகுதியை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்து விடுவதாகவும் ராம்நிவாஸ் கோயல் கூறியுள்ளார்.