இந்தியா

வரதட்சனை வாங்காத கணவருக்கு நேர்ந்த கொடுமை - மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு

webteam

ஒடிசா அருகே வரதட்சனை கொடுக்கத் தவறியதற்காக மனைவியின் உடலை தகனம் செய்யக் கூடாது என கணவருக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஒடிசா, மயூர்பாஞ்ச் மாவட்டம், குச்சேயி கிராமத்தில் வரதட்சனை வாங்காமல் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்ற வழக்கம் காலம் காலமாக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த கிராமத்தில் பெண் ஒருவர் நோயால் உயிரிழந்துள்ளார். அவரின் திருமணத்தின்போது வரதட்சனையாக 2 மாடுகள், ஒரு ஆடு, மூன்று சேலைகள் தருவதாக கூறியிருந்தார். ஆனால், அதனை அந்த பெண்வீட்டார் கொடுக்கவில்லை என தெரிகிறது. வரதட்சனை கொடுக்கவில்லை எனக்கூறி உள்ளூர்வாசிகள் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்ய அவரது கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெண் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் கணவருக்கு அனுமதி தரவில்லை.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவலறிந்து சென்ற போலீசார் ஊர்ப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய உதவினர்.