உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு புகார் குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவரை உயர் அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உன்னாவ் மாவட்டத்தில் பணிக்காகச் சென்ற திவாரி என்ற பத்திரிகையாளரை, முதன்மை வளர்ச்சி அதிகாரி திவ்யான்சு படேல் தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.