இந்தியா

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து விவசாயி மகன் சாதனை

PT

பீகாரில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் விவசாயி ஒருவரின் மகன் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சமஸ்திபூரைச் சேர்ந்த விவசாயின் மகன் துர்கேஷ்குமார் என்பவர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது “ எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எனது பெற்றோரும், ஆசிரியர்களும் எனக்கு உறுதுணையாக இருந்ததாலேயே என்னால் இதை சாதிக்க முடிந்தது. எதிர்காலத்தில் நான் ஐஐடி கல்லூரியில் படிக்க நினைக்கிறேன்." என்றார்.