இந்தியா

காஷ்மீரில் 7 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை?  

webteam

ஜம்மு- காஷ்மீர் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தின் BAT அமைப்பினர், பயங்கரவாதிகள் என 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 7 பேரின் உடல்கள் மீட்கப்படாமல் கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த BAT (border action team) என்ற குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அதிரடிப்படையினர், பயங்கரவாதிகள் BAT குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.