இந்தியா

இனி “அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா” என்றுதான் மாற்ற வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

Veeramani

இந்தியாவில் ஆறு ஏர்போர்ட்கள் அதானியின் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்றுதான் மாற்றவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ முதலில் அகமதாபாத், லக்னோ, மங்களூர் ஆகிய விமான நிலையங்கள் விற்கபட்டன. இப்போது ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகியவை விற்கப்படவுள்ளன. ஆனால் இந்த ஆறு ஏர்போர்ட்களும் அதானியின் நிறுவனத்துக்குத்தான் விற்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்றுதான் மாற்றவேண்டும்” என்று கூறியுள்ளார்