இந்தியா

சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழப்பு

webteam

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழந்தனர்.

பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலின்போது, சத்தீஸ்கரின் நரியான்பூர் மாவட்டத்தில் 27 மாவட்ட ரிசர்வ் காவலர்கள் சென்ற பேருந்தை மாவோயிஸ்டுகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.