இந்தியா

சபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்!

jagadeesh

சபரிமலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

கோயில் ஊழியர்கள் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது.

கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பிறகே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது