இந்தியா

அமெரிக்கா: கார் விபத்தில் சிக்கி 3 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

JustinDurai

அமெரிக்கால் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் பல்கலைக்கழகம் மற்றும் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சிலர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காரில் வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கார் மீது எதிர்திசையில் வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கி காரில் இருந்த இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பிரேம்குமார் ரெட்டி கோடா (27), பவானி குல்லப்பள்ளி (22) மற்றும் சாய் நரசிம்ம பாடம்செட்டி (22) ஆகிய 3 இந்திய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஆந்திரா மாநிலத்தையும், ஒருவர் தெலங்கானாவையும் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் எம்எஸ் பயிலும் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பனிமூட்டமாக இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: உக்ரைன் நாட்டை விட்டு வெளிவேற மறுக்கும் இந்திய மாணவர்கள் – இந்த நெருக்கடிதான் காரணமா?