இந்தியா

திருமணம் செய்ய மறுத்த பெண் மென்பொறியாளரை கத்தியால் குத்திய சலூன் கடை இளைஞர்!

webteam

திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்த பெண் மென்பொருள் பொறியாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்

ஹைதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 29 வயதான பெண்ணை பிரபல சலூன் கடையில் வேலை பார்க்கும் சல்மான் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. பொறியாளரின் வீடருகே வசிக்கும் அந்த இளைஞர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அப்பெண் திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார்.

சல்மான் தொடர்ந்து வற்புறுத்தவே அவர் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் மென்பொருள் பொறியாளரை கத்தியால் முதுகிலும் நெஞ்சிலும் மாறி மாறி குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கொலை செய்ய முயற்சி செய்த இளைஞரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.