நக்சல் இயக்கத்தினர்
நக்சல் இயக்கத்தினர்  ட்விட்டர்
இந்தியா

சத்தீஸ்கர் | நக்சல் இயக்கத்தினர் 29 பேர் சுட்டுக் கொலை!

PT WEB

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கெர் மாவட்டம் சோட்டிபெதியா பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த மூவர் காயம் அடைந்தனர்.

பதில் தாக்குதலில் நக்சல்கள் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில், நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஷங்கர் ராவும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். மேலும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.