இந்தியா

சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம்

webteam

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலின்போது, பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக பிஜாப்பூர்எஸ்.பி. கமலோச்சன் காஷ்யப் தெரிவித்தார்.