இந்தியா

லக்னோ: பழச்சந்தையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து -20 கடைகள் தீயில் எரிந்து நாசம்

webteam

லக்னோவில் உள்ள பழச் சந்தை ஒன்றில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்துகுள்ளானதில் 20 கடைகள் தீயில் கருகி சாம்பலாகின.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சீதாபூர் சாலையில் பழச் சந்தையில் அமைந்துள்ள  கடை ஒன்றில் நேற்று (சனிக்கிழமை ) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  சிறிது நேரத்தில் தீ அருகே இருக்கும் கடைகளுக்கும் பரவியது. தீ மற்றும் புகை மூட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  கடைகளில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும் , இதில்  20 கடைகள் தீயில்  சாம்பலான என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் ,  தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததாக வியாபாரிகள் குற்றம்சாட்டி  தீயணைப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், கடைக்காரர்கள் பட்டியலை கொடுத்த பிறகே தீயினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட முடியும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.