இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

webteam

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள், சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி பிடிபட்டுள்ளார். மேற்கொண்டு அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.