கூட்டு பாலியல் வன்கொடுமை
கூட்டு பாலியல் வன்கொடுமை முகநூல்
இந்தியா

மேற்கு வங்கம் | கல்லூரி மாணவி, தன் நண்பர்களாலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை

ஜெனிட்டா ரோஸ்லின்

மேற்கு வங்கத்தில் 19 வயதுள்ள பெண்ணொருவர், கல்லூரி முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அப்படி சென்ற அவர் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அவரது பெற்றோர் அவரை தேடி சென்றுள்ளனர். அங்கு தங்களின் மகள் ஒரு அறையில் அரை மயக்க நிலையில் இருப்பதனை கண்ட பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வன்கொடுமைக்கு முன் மாணவி மது அருந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து, மாணவியின் பெற்றோர் புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

அதன்பேரில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதன் பேரில் ரதீந்திர நாயக், சுபோ, டெபோஜோதி தத்தா, தமோஜித் சர்தர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.