infant
infant pt web
இந்தியா

பொதுமருத்துவமனையில் 3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு; மகாராஷ்டிரத்தில் தொடரும் அவலம்

Angeshwar G

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தின் பொது மருத்துவமனையில், தற்போதுவரை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் 179 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி , ஜூலையில் 75 குழந்தைகளும், ஆகஸ்ட் மாதத்தில் 86 குழந்தைகளும் மற்றும் செப்டம்பரில் 18 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இறப்புக்கான முக்கிய காரணங்கள் குறைந்த எடை, பிறப்பு மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாச நோய்கள் என கூறப்படுகிறது

70% இறப்புகள் 0-28 நாட்கள் வயதுடைய குழந்தைகள் ஆகும். பல பெண்களுக்கு இங்கு அரிவாள் செல் இருப்பதால் பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறும் மாவட்ட நிர்வாகம் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.