flyover collapse
flyover collapse pt desk
இந்தியா

கட்டும்போதே இடிந்து விழுந்த ரயில் மேம்பாலம்... 17 பேர் பலி – மிசோரத்தில் சோகம்!

webteam

மிசோரம் மாநிலம் சாய்ரங் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் ரயில் மேம்பாலம் இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

flyover collapse

இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 30 முதல் 40 தொழிலாளர்கள் வரை இடுபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.