இந்தியா

நல்லவேளை கண்ணாடி திறக்கல.. பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தை.. பதற வைக்கும் CCTV காட்சி!

webteam

குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளும் மக்களும் செல்லும் பாதைகளில், வீடுகள் இருக்கும் பகுதிகளில் உலா வருவது தென்பட்டு வருகிறது.

அந்த வகையில் அசாம் மாநிலத்தில் வாகனங்களில் சென்றவர்களை சிறுத்தை தாக்கியதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதன்படி, ஜோர்காட் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து சுற்றித் திரிந்து வந்திருக்கிறது.

அது தனது கண்ணில்பட்டவர்களை தாக்கி வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் ஒரு வீட்டுக்குள் புகுந்த அந்த சிறுத்தை சாலையில் வாகனம் சென்றதை கண்டதும் பாய்ந்து வந்து தாக்க முயற்சித்திருக்கிறது. இதில் காரின் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

விரிவான செய்தியை காண: