இந்தியா

மும்பை: கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 10 நோயாளிகள் உயிரிழப்பு

Sinekadhara

மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.

பந்துப் மேற்கு பகுதியில் உள்ள ட்ரீம்ஸ் என்ற வணிக வளாகத்தில் சன் ரைஸ் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தடுப்பு மையமும் அமைக்கப்பட்டிருந்தது. வணிக வளாகத்தில் நேற்று ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பற்றி மருத்துவமனைக்கும் பரவியது. 40-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் இன்று காலை வரை ஈடுபட்டன.

இசந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்விடத்துக்கு சென்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.