இந்தியா

“மோடி என்னை நிதியமைச்சராக்க வேண்டும், அவருக்கு பொருளாதாரம் புரியவில்லை” : சுப்ரமணிய சுவாமி

webteam

பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் தன்னை நிதியமைச்சராக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதங்களை அதிகரித்தார், எனவே நிதி மூலதன செலவு அதிகரித்தது. பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படுவதற்கு ரகுராம் ராஜன்தான் பொறுப்பு. பொருளாதாரம் என்பது ஒரு பெரிய தலைப்பு. அங்கு ஒரு துறை மற்ற துறை தாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் ஜே.என்.யுக்குச் சென்று பட்டம் பெறலாம், எதையும் கற்றுக்கொள்ள முடியாது. பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் தன்னை நிதியமைச்சராக்க வேண்டும். ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால், நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல, நான் ஒரு அரசியல்வாதியும் கூட. நிதியமைச்சர் பதவியில் நான் நன்றாக செயல்பட்டால் அடுத்து பிரதமர் பதவி கேட்பேன் என கட்சியினர் பயப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.