ஆனால் போதைப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் மன உளைச்சல், பதட்டம், எரிச்சல், கோபம், எந்த செயலிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார்கள். இதுதான் Subatance abuse disorder என்று சொல்லப்படுகிற மனநல சம்பந்தப்பட்ட பிரச்னை. அதேசமயம் சிலர் இனி கிடைக்காது என்ற மனநிலைக்கு வரும்போது அதற்கான தேடலை விட்டுவிடுவார்கள்.
ஆரம்பத்தில் உடல் மன ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டாலும் நாட்கள் போக போக உடல் ரீதியாக உபாதைகளிலிருந்து விடுபட ஆரம்பிப்பார்கள். மன ரீதியாக உபாதைகளும் ஓரளவு குறையும். இந்த காலகட்டம் மறு புணரமைப்பு (detoxificaiton) பெற வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. மது அல்லது போதைப் பொருட்களை தேடுவதற்கு மேனியா என்று சொல்லப்படுகிற மன எழுச்சி அல்லது கவலை ஒரு காரணமாக இருக்கலாம். ஓரளவு விடுபட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்கள் பிரச்னைக்கான காரணிகளைக் கண்டறிந்து உளவியல் ரீதியான உதவிகளை செய்தால் அவர்களை நிரந்தரமாக விடுவிக்கலாம்.
அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு கிடைக்காமல் போனதால் மனச் சிதைவு நோய் வரலாம். அவர்கள் கட்டாயம் மனநல மருத்துவரை அணுகவேண்டும். சிலர் கோயில், யோகா என அழைத்துச் செல்வார்கள். மன அழுத்தத்திற்கு வேண்டுமானால் அது பயனுள்ளதாக இருக்கும். இரண்டு விதமான மனநோய்கள் இருக்கின்றன. ஒன்று தன்னிலை தெரியாதவர்களை சைகோசிஸ் என்று சொல்லுவர். மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் நியுரோஸ் வகையில் அடங்குவர். இவர்களுக்கு யோகா, தியானம் போன்றவை உதவி செய்யும்.
மன சிதைவு நோய் போன்ற சைக்காடிக் டிஸார்டர் உள்ளவர்கள் கட்டாயம் மன நல மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும். மேலும் போதைப் பொருட்களை எடுப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கும் சரியான ஆலோசனைகள் வழங்குவதே முழுமையான தீர்வாக அமையும்.
போதைப் பொருட்களைத் தேடுவதற்கு அடிப்படை காரணம் என்ன?
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருந்து இருந்து குடும்பத்தில் உருவான பிரச்னைகள்கூட போதைப் பொருட்களைத் தேடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் என்ன? அதற்கு உளவியல் ரீதியான தீர்வுகள் என்ன என்பதையே பார்க்கவேண்டும்.