ஹெல்த்

தனியாக சாப்பிட்டால் இதயக்கோளாறு நிச்சயமாம்... கூடவே எக்கச்சக்கமான பாதிப்புகளும்...!

JananiGovindhan

தியேட்டர், ரெஸ்டாரென்ட் போன்ற மக்கள் கூடும் பகுதிகளுக்கு ஒற்றையாளாக செல்பவராக இருந்தால் எந்த இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் எண்ணம் வரும் எனக் குறிப்பிட்டு பல மீம் பதிவுகள் சமூக வலைதளங்களில் காணக் கிடைப்பதுண்டு.

ஆனால் எவரது துணையும் இல்லாமல் தனியாக ஒருவர் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தால் அது இதயக் கோளாறை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக பெண்களுக்கு இதய பாதிப்பை உண்டாக்கும் என்றும் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

verywell fit என்ற நிறுவனத்தின் தரவுகளின் படி, தினந்தோறும் தனிமையில் உணவும் உண்ணும் பெண்கள், கூட்டாக சேர்ந்து சாப்பிடும் பெண்கள் என 65 வயது வரையுள்ள 590 பெண்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

அதில், தினசரி தனியாக சாப்பிடும் பெண்களுக்கு ஆஞ்சினா (angina) என்ற இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கும் கரோனரி இதயக் கோளாறை 2.58 மடங்கு அதிகம் வர வைக்கிறது என தெரிய வந்திருக்கிறது. இதுபோக தனியாக சாப்பிடுவதால் ஏற்படும் இதர பிரச்னைகளையும் குறிப்பிட்டிருக்கிறது.

அதன்படி, எப்போதும் தனியாக சாப்பிடும் பழக்கம் உள்ள பெண்களுக்கு அதிகளவிலான உணவை உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்றும், இப்படியாக அதிகளவில் சாப்பிட்டால் எடை கூடுவதோடு, நீரிழிவும், உயர் ரத்த அழுத்தத்துக்கான அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறதாம்.

இதனையடுத்து, எவரது துணையும் இல்லாமல் தனியாக சாப்பிடும் பழக்கம் உடைய பெண்களுக்கு மனச்சோர்வு உண்டாகிறதாம். ஏனெனில் இயற்கையாக, தனியாக சாப்பிடும்போது தனிமை உணர்வை ஏற்படச் செய்துவிடுகிறது.

ஆகவே, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் மனச்சோர்வின் அபாயங்களைக் குறைக்க, பல வழிகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக, புகைப்பிடித்தல் கூடாது, மதுக் குடிப்பதை குறைக்க வேண்டும், தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மனநலனை பேணிக் காப்பது ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.