இன்ப்ளூயன்ஸா மற்றும் மற்ற வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், சமூகத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அதிகளவில், இன்ப்ளூயன்ஸா வைரஸ், ஆர்.எஸ்.வி எனப்படும் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. தற்போது, கொரோனா பலவீனப்பட்ட பருவ கால நோயாக இருந்தாலும், அதில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதற்கான பரிசோதனை, அவ்வப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா, பறவைக் காய்ச்சல், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட ஏழு வகையான பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் பாதிப்புகள் சமூகத்தில் இல்லை என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.