இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும் வகையிலேயே நமது வாழ்க்கைமுறை உள்ளது. அதில் கருவுறுதல் பிரச்னையும் ஒன்று. குறிப்பாக இளம்வயது பெண்களிடையே இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. உணவு பழக்கவழக்கம், தூக்கம், மரபணு பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த பிரச்னை அதிகளவு வருகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா விளக்கியுள்ளார். குறிப்பாக, பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகள் குறித்தும், மலட்டுத்தன்மை குறித்தும் விளக்கியுள்ளார். மோசமான வாழ்க்கைமுறை இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்குவது போலவே கருப்பை பிரச்னைகளும் உருவாகிறது என்கிறார் மல்ஹோத்ரா.
எனவே தினசரி உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதிகளவு பயிற்சி என்பது அவசியமில்லை. ஏனென்றால், அதிக அளவு கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவைக் குறைக்கும். இதுவும் ஒருவழியில் கருவுறுதல் வாய்ப்பை குறைக்கும்
என்கிறார் மல்ஹோத்ரா.