கணித திறன் fb
ஹெல்த்

மின்னாற்றலை செலுத்தினால் கணித திறன் அதிகரிக்குமா?

குறைந்தளவு மின்னாற்றலை மூளைக்குள் செலுத்தினால் கணித திறன் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

PT WEB

பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 வயது முதல் 30 வயதுள்ளவர்களின் மூளையில் மிகச்சிறிய அளவு மின்சாரத்தை செலுத்தியபோது உள்ளே மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

இதனால் கணித அறிவு, கற்றல் திறன், நினைவாற்றல், கவனக்குவிப்பு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 5 நாட்களுக்கு 72 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.