மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின் 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார். இந்த வருடமும் நிர்மலா சீதாராமன் நீண்ட நேரம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரையின் முழு விவரங்கள்:
- ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இளைஞர்கள், பெண்கள் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்.
- சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில்துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
- சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்
- போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
- 2023க்குள் 2ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்
- எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உறபத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
- ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்
- கோதாவரி- பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 ந தி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
- அடுத்த நிதியாண்டில் 22ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
- 1-12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதி
- ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்
- அடுத்த நிதியாண்டில் 22ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்
- 1-12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதி
- சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை
- நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு
- ரூ.60 ஆயிரம் கோடியில் 18லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை
- 200 கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்படும்
- டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும்.
- டிஜிட்டல் பல்கலைகழகங்கள் உருவாக்கப்படும்.
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
- வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
- நவீன தொழில்நுட்பத்துடன் சிப்
- பொருத்திய இ-பாஸபோர்ட் முறை அறிமுகப்பட்டுத்தப்படும்.
- மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக்கொள்வது தொடர்பான திட்டம் கொண்டுவரப்படும்.
- நில ஆவணங்களை மின்னணு முறையில் அவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒரேநாடு ஒரே பதிவுமுறை கொண்டுவர திட்டம்.
- நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
- 2023ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
- 75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் ஏற்படுத்தப்படும்.
- நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு ஒரே பதிவு முறை கொண்டுவரப்படும்.
- 2025ம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும்.
- பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாடங்களில் 68% உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை.
- பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை தொடங்கப்படும்.
- அரசின் மூலதன செலவினங்களுக்காக ரூ.7.5லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
- வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2030ம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்.
- டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வாங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவிப்பு
- மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
- மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் என அறிவிப்பு
- பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்.
- வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5%ஆக குறைப்பு
- மொபைல், சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை
- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை
- தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடர்கிறது