சிறப்புக் களம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 78 நாள் ஆட்சி எப்படி?

webteam

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவரது பதவி ஏற்பே ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் நடந்தது. அவர் ஆட்சியில் அமர்ந்த நேரம் நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என ஆங்காங்கே போராட்டங்கள். மூன்று முறை அமைச்சரவை கூட்டத்தை நடத்தி அரசு இயந்திரம் இயங்குவதை உறுதி செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. வறட்சி நிவாரணக் கோரிக்கை போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களும் பரவலாக நடைபெற்று வருகின்றன. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் அவர் பதவியில் 78 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்.. எப்படி இருக்கிறது அவரது ஆட்சி என்பதை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.