சுற்றுச்சூழல்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

kaleelrahman

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், இது ஸ்ரீஹரிகோட்டா - காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு வடக்கே தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.