சுற்றுச்சூழல்

கழிவுகளை அகற்றாத மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்!

கழிவுகளை அகற்றாத மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்!

webteam

சேலத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இதற்கு பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்கள் வளர ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந் நிலையில், சேலத்தில் மாநகராட்சி ஆணையாளர், டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின்பொழுது, தனியார் மருத்துவமனை ஒன்று டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார்.

அந்த மருத்துவமனை, மருத்துவ கழிவுகளை அகற்றாததால் ரூ.5 லட்சமும் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருந்ததால் ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.